அலங்காநல்லூர், ஆக.22: அலங்காநல்லூரில் போக்குவரத்து ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள 15பி.மேட்டுபட்டியை சேர்ந்தவர் பெரியணன்(32). இவர் மதுரை பசுமலை அரசு பணிமனையில் ஊழியராக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி இரவு ஊரிலுள்ள நாடகமேடையில் இரத்தக்கறை படிந்திருந்தது. கிராமத்திற்கு அருகே பெரியணன் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டு கிடந்தார். இதையொட்டி அலங்காநல்லூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.