மரக்கன்று வழங்கும் விழா

வத்தலக்குண்டு, ஆக. 22: வத்தலக்குண்டு அருகே கட்டக்காமன்பட்டி தீனதயாள் உபாத்தியாய அறக்கட்டளை சார்பாக மரக்கன்று வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா தலைமை வகிக்க, ஒருங்கிணைப்பாளர் சின்னன், ஊராட்சி செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை நிறுவனர் தீர்த்தம் வரவேற்றார். விழாவில் பிடிஓ, தேசிய ஊரக பணியாளர்கள் சுமார் 100 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினார். ஒப்பந்தகாரர் பாஸ்கர் நன்றி கூறினார்.

Related Stories: