வத்தலக்குண்டு, ஆக. 22: வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 300க்கும் குறைவாகவே மாணவர்கள் உள்ளனர். இவர்கள் 30க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கொண்ட பழைய ஆங்கிலேயர் காலத்து எச் வடிவ 2 மாடி கட்டிடத்தில் பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில்
புதிதாக கட்டப்பட்ட 30 வகுப்பறைகள் கொண்ட 3 மாடி கட்டிடமும் உள்ளது. இந்த இரு கட்டிடமும் தனித்தனியே 300 அடி இடைவெளியில் உள்ளது. ஆகையால் ஆங்கிலேயர் கால கட்டிடத்தில் நடக்கும் பள்ளியை புதிய கட்டிடத்திற்கு மாற்றி விட்டு இந்த கட்டிடத்தில் அரசு இருபாலர் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரி அரசு கல்லூரி அமைப்பு கமிட்டி ஏற்படுத்தினர்.