திண்டுக்கல், ஆக. 22: திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் முருகன் ஆலோசனையின்பேரில், உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் வழிகாட்டுதல்படி திண்டுக்கல் அருகே தண்ணீர் பந்தம்பட்டியில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடந்தது. முகாமில் கால்நடைகளுக்கு மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. கால்நடை வளர்ப்போரிடம் டாக்டர் சேகர் பேசியதாவது, ‘கால்நடைகள் நமது செல்வம் என்பதை உணர்ந்து நாம் அவற்றிற்கு தேவையானவற்றை செய்ய வேண்டும். கோமாரி நோய் தடுப்பூசிகள் கட்டாயம் போட வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை தண்ணீர் வைக்க வேண்டும். மழையில் நனைய விடக்கூடாது. கால்நடைகள் கட்டி இருக்கும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நோய்கள் தாக்காது. மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு காய்ச்சல் போன்ற பல நோய்கள் ஏற்படும், அந்த நேரத்தில் கால்நடைகளை மருத்துவமனைக்கு உடனே கொண்டு வந்து ஊசிகளை போட வேண்டும்.