வத்தலக்குண்டு, ஆக. 22: நிலக்கோட்டை பஸ்நிலையம் முன்பு சாலை தடுப்புச்சுவரில் இடைவெளி இல்லாததால் பஸ்கள் உள்ளே, சென்று வர முடியாமல் சிரமப்படுகின்றன. எனவே தடுப்புச்சுவரில் இடைவெளி விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நிலக்கோட்டை பஸ்நிலைய பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சாலையை தலா 6 அடி வீதம் இருபுறமும் அகலப்படுத்தினர். அதன்பிறகு கடந்த மாதம் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்தனர். அப்படி அமைக்கும் போது பஸ்நிலையம் முன்பு பஸ்கள் உள்ளே, வெளியே செல்வதற்கு இடைவெளி விடாமல் தடுப்புச்சுவர் அமைத்து அடைத்து விட்டனர். இதனால் வத்தலக்குண்டு ரோட்டில் இருந்து வரும் பஸ்கள் உள்ளே, வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.