சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் போக்சோவில் உறவினர் கைது

திருப்பூர், ஆக. 22:   திருப்பூரில் 14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த உறவினரை போக்சோவில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.  திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியருக்கு 14 வயதில் பெண் குழந்தை உள்ளது. சிறுமி சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர். அந்த சிறுமி அருகே உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் மற்றும் சிறுமியின் அக்கா குடும்பம் இருவரும் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று சிறுமியின் தாய் மற்றும் அக்கா ஆகியோர் வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த 14 வயது சிறுமியை அவரின் அக்கா கணவர் பவுன்ராஜ் (33) ஆசைவார்த்தை கூறி வீட்டிற்குள் அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

 இதுகுறித்து சிறுமி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பவுன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Related Stories: