பொங்கலூர், ஆக. 22: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பொங்கலூர் வட்டார வளமையத்தின் சார்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடந்தது. திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் ஒருகிங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடந்தது. பொங்கலூர் பொ.உ.வெ.நாயுடு ஆரம்ப பள்ளி வளாகத்திலிருந்து துவங்கிய பேரணிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) மஞ்சுமாதேவி முன்னிலை வகித்தார்.