அன்னூர்,ஆக.22:அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளாமடை கிராமத்தில் 200 ஆண்டு பழமை வாய்ந்த கருவண்ணராயர்,வீரசுந்தரி கோயில் உள்ளது.கடந்த 2008ம் ஆண்டு ஊர் மக்களால் இக்கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு கருவறைக்குள் கருவண்ணராயர் சிலையை அமைத்தனர்.
மேலும் கோயில் வளாகத்தினுள் தன்னாசியப்பர் சிலையையும் நிறுவினர். இக்கோயிலில் தினசரி வழிபாடுகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் நேற்று காலை பூசாரி கோயிலுக்கு சென்று பார்த்தபோது தன்னாசியப்பர் சிலைக்கு அவமரியாதை செய்திருந்தது தெரியவந்தது.