சேலம், ஆக.22: ஓமலூர் அருகே திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரியில், 9-வது பேட்ச்சின் பிஇ முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தொழில்துறை வழிகாட்டுனர் மற்றும் புள்ளியியல் வல்லுனர் ஜெயப்பிரகாஷ் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் கல்லூரி தலைவர் திரஜ்லால் காந்தி பேசுகையில், ‘கல்வி என்பது தமது அறிவை மற்றவரிடத்து பகிர்ந்து கொள்ளவும், நிறைவான சமுதாய பணிகள் சிறப்பாக செய்யவும் பாலமாக அமைய வேண்டும். நவீன தொழில்நுட்பக் கருவிகளான செல்போன், லேப்டாப் போன்றவற்றை சரியாக பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகளை கற்க வேண்டும்,’ என்றார்.