சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்

சேந்தமங்கலம், ஆக.22: சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில், முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 25ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, நகர மருத்துவ சேவை அணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஜாகீர்உசேன் தலைமை தாங்கினார். முதன்மை மருத்துவ அலுவலர் சாந்தி கருணாநிதி முகாமை தொடங்கி வைத்தார். இதில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். மருத்துவமனை சார்பில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர்  சுல்தான் பாஷா, செயலாளர் சபீர், ரத்தவங்கி கண்காணிப்பாளர் அன்புமலர், லேப் டெக்னீசியன் சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: