சேந்தமங்கலம், ஆக.22: தொடர் மழை காரணமாக புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. தற்போது ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால், ஆடுகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று கூடிய ஆட்டுச்சந்தையில், அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை வாங்க வந்திருந்தனர்.