தர்மபுரி, ஆக.22: தர்மபுரி தொன்போஸ்கோ கல்லூரியில், குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில், உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தர்மபுரி தொன்போஸ்கோ கல்லூரியில், குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில், உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி நேற்று நடந்தது. வணிகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஜேம்ஸ் வரவேற்றார். கல்லூரியின் பொருளாளர் சாம்சன் சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தர்மபுரி மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, உணவு பாதுகாப்பு நோக்கம் மற்றும் துறை செயல்பாடுகள் குறித்து பேசினார்.