அரூரில் இருந்து தர்மபுரிக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வலியுறுத்தல்

அரூர், ஆக.22: அரூரில் இருந்து தர்மபுரிக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரூர் பகுதியிலிருந்து தர்மபுரிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணியாளர்கள் என தினந்ேதாறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த வழித்தடங்களில் இருந்து 15 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இருந்த ேபாதும், இந்த பஸ்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக, பஸ் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்ய ேவண்டிய நிலை உள்ளது. இதனால், பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரூரில் இருந்து தர்மபுரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: