எஸ்.தாதம்பட்டியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

தர்மபுரி, ஆக.22: தீர்த்தமலை அருகே எஸ்.தாதம்பட்டியில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தீர்த்தமலை அருகே எஸ்.தாதம்பட்டியில், வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் மலர்விழி தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். எனவே, எஸ்.தாதம்பட்டி கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: