விக்கிரவாண்டி, ஆக. 22: மயிலம் அடுத்த ரெட்டணை கிராமத்தில் தொண்டி ஆற்றின் நடுவே கட்டப்பட்ட தடுப்பணையின் விரிசல்கள் மற்றும் பழுதடைந்த கதவுகளை சீரமைக்காவிட்டால் கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என எம்எல்ஏ மாசிலாமணி அறிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது: மயிலம் தொகுதிக்குட்பட்ட ரெட்டணை கிராமத்தில் செல்லும் தொண்டி ஆற்றின் குறுக்கே கடந்த 2014ம் ஆண்டு ரூ. 8 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்ட தடுப்பணை அடுத்த ஆண்டு வந்த வெள்ளத்தால் சேதமடைந்தது. இதனால் மழை காலங்களில் ஆற்றில் வரும் நீரானது அங்குள்ள கதவுகளின் வழியாக தண்ணீர் தேங்கி நிற்காமல் போய்விடுகிறது, மேலும் 15க்கும் மேற்பட்ட கிராமத்தின் நீர் ஆதாரமாகவும் உள்ளதாக பொதுமக்கள் கூறினர். இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி அணையை பார்வையிட்டேன், மேலும் தடுப்பணை பழுதடைந்தது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையை நேரில் வந்து ஆய்வு செய்தனர்.