ரிஷிவந்தியம், ஆக. 22: ரிஷிவந்தியம் அருகே அத்தியூர் கிராமத்தில் ரிஷிவந்தியம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மற்றும் ரிஷிவந்தியம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து கண்காட்சி நடந்தது. ரிஷிவந்தியம் வட்டார மருத்துவ அலுவலர் சரஸ்வதி தலைமையேற்று துவக்கி வைத்தார்.வாணாபுரம் மருத்துவ அலுவலர் அருண்குமார், அத்தியூர் ஊராட்சி செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊட்டச்சத்து கண்காட்சியை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மேற்பார்வையாளர் முனியம்மாள் பார்வையிட்டார்.இதில், போஷன் அபியான் வட்டார ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த், அங்கன்வாடி பணியாளர்கள் சின்னபொண்ணு, சித்ரா, ஆதிலட்சுமி, தமிழ்மொழி உள்ளிட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில் காய்கறிகள், பழங்கள், ஊட்டச்சத்து மாவு, சிறுதானியங்கள், கீரை வகைகள் வைக்கப்பட்டிருந்தது.