211 பேர் பங்கேற்பு குடந்தையில் மறைமுக ஏலம் 850 குவிண்டால் பருத்தி விற்பனை

கும்பகோணம், ஆக. 22: கும்பகோணம் அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த முறைமுக ஏலத்தில் 850 குவிண்டால் பருத்தி விற்பனையானது.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நேற்று நடந்தது. வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலை வகித்தார். இதில் முத்தூர், அகராத்தூர், வேப்பத்தூர், திருவிடைமருதூர், கடலங்குடி, கடம்பங்குடி, கருமாத்தூர், அசூர், ஆதனூர் மற்றும் ஊமையாள்புரத்தை சேர்ந்த 500 விவசாயிகள் 850 குவிண்டால் எடையுள்ள பருத்தியை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர். விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை சேலம், கும்பகோணம், செம்பனார்கோவில், விழுப்புரம், ஆக்கூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 9 பருத்தி வியாபாரிகள் பங்கேற்று தரத்தை ஆய்வு செய்தனர். இதில் ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக ரூ.5,730, சராசரியாக ரூ.5,549, குறைந்தபட்சமாக ரூ.4,841 விலை போனது.

Related Stories: