உத்திரமேரூர், ஆக. 22: சாலவாக்கம் அரசு பள்ளியில் 292 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட்டது.உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயரூபி தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் துரைவேலு, ஊராட்சி செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் வெங்கடேசன், பாபு, முரளிதரன், விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.