காஞ்சிபுரம், ஆக.22: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ₹10 லட்சம் மதிப்பில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
காஞ்சிபுரத்தில் திட்ட இயக்குநர் தர் தலைமையில், கலெக்டர் பொன்னையா மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் ஒன்றியத்தில் களக்காட்டூர் உள்பட 5 ஊராட்சிகளில் 3000 மரக்கன்றுகள், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 29 கிராங்களில் 5000, பெரும்புதூர் ஒன்றியத்தில் 15 கிராமங்களில் 2000, பரங்கிமலை ஒன்றியத்தில் 6 கிராமங்களில் 700, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 12 கிராமங்களில் 3000 மரக்கன்றுகளும் நடப்பட்டன.