ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா

மதுரை ஆக 20: காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மதுரை மாவட்ட குழு சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், ‘ஊரக வளர்ச்சித் துறையில் 7 ஆண்டு பணிபுரிந்த மேற்பார்வையாளர்களுக்கு இளநிலை பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.  அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் செல்வம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் உலகநாதன், மாவட்ட செயலாளர் பாலாஜி அலுவலகர் சங்க மாநிலச் செயலாளர் முருகையன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நீதிராஜா, பல்வேறு சங்க நிர்வாகிகள் மற்றும்  விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Related Stories: