கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருமங்கலம், ஆக. 20: திருமங்கலத்தில், குமரன் கோயில் அருகே, கஞ்சா விற்பதாக  டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, எஸ்ஐ இளங்கோ தலைமையில் அங்கு சென்ற போலீசார், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த திருமங்கலம் ஊத்துமேட்டைச் சேர்ந்த வெயிலா (36), சந்திரா (45) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: