டீக்கடைக்காரர் கொலையில் ஒருவர் சரண்

மதுரை, ஆக. 20: மதுரை கிருஷ்ணாபுரம் காலனி டீக்கடைக்காரர் கொலை வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நேற்று சரணடைந்தார். மதுரை கிருஷ்ணாபுரம் காலனி, பாரதி தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (50). இவர், அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் கடந்த 17ம் தேதி,  ஓசி டீ கேட்டு தகராறு செய்த 6 பேர் கொண்ட கும்பல், மாரிமுத்துவை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த வீரகார்த்திக், விக்னேஷ்பாண்டி, அருண்குமார், காவிரி மணி ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான முட்டகண்ணு பிரசாத், மதுரை ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: