இளம் பெண்ணை தாக்கிய சகோதரர்கள் கைது

திருப்பூர்,ஆக.20: திருப்பூரில், திருமணம் செய்ய மறுத்து, பெண்ணை தாக்கிய, அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் காங்கயம் ரோட்டை சேர்ந்தவர் 32 வயது பெண். இவருக்கு கடந்த 2009ம் ஆண்டு ஒருவருடன் திருமணம் நடந்தது. தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆறு மாதத்தில் தம்பதியர் பிரிந்தனர்.ஆண் குழந்தையுடன், அப்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பாண்டித்துரை (27) என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும், திருமணம் செய்யாமல், நான்கு ஆண்டு வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், தன்னை ஏமாற்றி, பத்து லட்சம் ரூபாய் பெற்று கொண்டு, திருமணம் செய்ய மறுப்பதாகவும், இதுதொடர்பாக கேட்டதற்கு, அவருடைய அண்ணன் உடன் சேர்ந்து பாண்டித்துரை தாக்கியதாக திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரித்த போலீசார், தம்பி பாண்டித்துரை, (27), அண்ணன் ராஜேஷ்குமார் (29) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: