திருப்பூர்,ஆக.20: திருப்பூரில், திருமணம் செய்ய மறுத்து, பெண்ணை தாக்கிய, அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் காங்கயம் ரோட்டை சேர்ந்தவர் 32 வயது பெண். இவருக்கு கடந்த 2009ம் ஆண்டு ஒருவருடன் திருமணம் நடந்தது. தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆறு மாதத்தில் தம்பதியர் பிரிந்தனர்.ஆண் குழந்தையுடன், அப்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பாண்டித்துரை (27) என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும், திருமணம் செய்யாமல், நான்கு ஆண்டு வாழ்ந்து வந்தனர்.