உடுமலை,ஆக.20:உடுமலை அருகே உள்ள புக்குளத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.25.92 கோடி மதிப்பீட்டில் 320 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உடுமலையில் பொருளாதாரத்தில் நலிவடைந்து, குடிசையில் வசிக்கும் 320 குடும்பத்தினருக்கு வீடு கட்டி கொடுக்கும் வகையில், குடிமங்கலம் ஒன்றியம்புக்குளத்தில் 2.62 ஏக்கர் பரப்பளவில் 3 தளங்களுடன் கூடிய குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஒரு வீட்டின் பரப்பளவு 401.24 சதுர அடியாகும்.