சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

உடுமலை, ஆக. 20:தளியில் இருந்து ஆனைமலைசெல்லும் ரோட்டில் மொடக்குபட்டி பிரிவு உள்ளது. திருமூர்த்திமலை செல்லும் வாகனங்கள், பொன்னாலம்மன் சோலை வழியாக இந்த சாலையில் செல்கின்றன. மொடக்குபட்டி பிரிவில் இருந்து சுமார் 3கிமீ., தூரத்துக்கு, சாலை சீரமைப்பதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டன. ஆனால் பணி முடியாமல் பல மாதங்களாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர்.இரு சக்கர வாகனங்கள் ஜல்லி கற்களால் பஞ்சராகின்றன. சாலை சீரமைப்பு பணி முடியாததால் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, உடனடியாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: