தீ காயத்துடன் சிகிச்சை பெற்ற பெண் சாவு

பெ.நா.பாளையம், ஆக். 20:  கோவை துடியலூரை அடுத்த சின்னதடாகத்தில் செங்கல் சேம்பரில் பணியாற்றி வருபவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சிராஜில்கார்ட்(25). இவரது மனைவி மர்ஜ்ஜானாகார்டு(24). இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து இருவரும் தடாகம் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி காலையில் மர்ஜ்ஜானாகார்டு தனது வீட்டில் பம்ப் ஸ்டவில் டீசல் ஊற்றி பற்ற வைக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அவரது புடவையில் தீ பிற்றியது. படுகாயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி மர்ஜ்ஜானாகார்டு நேற்று  இறந்தார்.  துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: