சேலம், ஆக.20: அன்னபூரணா ெபாறியியல் கல்லூரியில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சேலம் பெரியசீரகாபாடியிலுள்ள அன்னபூரணா பொறியியல் கல்லூரியில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, கல்லூரி முதல்வர் அன்புச்செழியன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சரவணன் முன்னிலை வகித்தார். விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி கல்வி குழுமத்தின் இயக்குனர் ராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அவர் பேசுகையில், ‘இந்திய தேச விடுதலைக்காக போராடிய தியாகிகள் செய்த மகத்தான தியாகங்களை எப்போதும் நினைவுகூர வேண்டும். உலகின் வல்லரசாகவும், நல்லரசாகவும் இந்தியாவை உருவாக்குவதே அந்த புனிதர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்,’ என்றார்.