கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தம்பதியால் பரபரப்பு

தர்மபுரி, ஆக.20: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தம்பதியரால் பரபரப்பு ஏற்பட்டது. அரூர் அருகே எல்லபுடையாம்பட்டியை சேர்ந்தவர் சொக்கன் (52). இவரது மனைவி மாரி (50). இவர்கள் இருவரும் நேற்று, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தனர். கலெக்டர் அலுவலக வாசலில் இருந்த போலீசார் அவர்களது பையை சோதனையிட்டபோது, பையின் உள்ளே ஒரு லிட்டர் மண்ணெண்ணை கேன் இருந்தது தெரியவந்தது. உடனே மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில், தங்களது விவசாய நிலத்திற்கு வழிப்பாதை விட அதே பகுதியை சேர்ந்தவர்கள் மறுத்து வருவதாகவும், இது தொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என்பதால், தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

Related Stories: