ஆலந்தூர்: கிண்டி - பரங்கிமலை இடையே ரயில்வே சுரங்கப்பாதை பணி கிடப்பில் போடப் பட்டுள்ளதால் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. கிண்டி - பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே ஆலந்தூர் பச்சையம்மன் கோயில் ரயில்வே கேட் இருந்தது. வேளச்சேரியில் இருந்து தினசரி ஆலந்தூருக்கும், ஆலந்தூரில் இருந்து வேளச்சேரிக்கும் வேலைக்கு, பள்ளிக்கு, மார்க்கெட்டுக் நடந்து செல்லும் 5 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த ரயில்வே கேட்டை பயன்படுத்தி வந்தனர். இங்கு, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டதால், ரயில்வே கேட்ைடை (எண்: 14) மூடுவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி கடந்த 2017ம் ஆண்டு இந்த ரயில்வே கேட் மூடப்பட்டது. இந்த பாதையில் 2.50 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு பணியும் தொடங்கியது.