உத்திரமேரூர் அருகே லட்சுமி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர், ஆக.20: உத்திரமேரூர் அடுத்த பட்டாங்குளம் கிராமத்தில் உள்ள லட்சுமி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. உத்திரமேரூர் அடுத்த பட்டாங்குளம் கிராமத்தில் பழமை வாய்ந்த லட்சுமி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணி நடந்து, முடிந்தது. இதையொட்டி நேற்று கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்களும் கணபதி பூஜை, கோ பூஜை, புன்யாவாசனம், வாஸ்து ஹோமம், சாந்தி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நேற்று காலை மூன்றாம்கால யாகசாலை பூஜை முடிந்தபின் மேளதாளங்கள் முழுங்க வாண வேடிக்கைகளுடன் புனிதநீர் கொண்டு வரப்பட்டு கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், புனிதநீர் அங்கு வந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.கோயில் வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்தனா்.இரவு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் லட்சுமி விநாயகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் சுவாமிக்கு தீபாராதனை காட்டி தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.

இதி சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Related Stories: