முத்துப்பேட்டை, ஆக.20: திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில்அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தியும், புதிய கட்டிடங்கள் கட்டி விரிவாக்கம் செய்தும் தரவேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து சுகாதார துறையினர்ரூபாய் 2கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பணியை துவங்க முடிவு செய்தது. இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவுப்படுத்தி மேம்படுத்த போதிய இடம் இல்லாமல் இருந்து வந்தநிலையில் அரசு மருத்துவமனை கட்ட தற்பொழுது உள்ள அரசு மருத்துவமனையின் எதிரே உள்ள நாகை முன்னாள் எம்பியும் திமுக மாநில விவசாய அணி செயலாளருமான ஏகேஎஸ்.விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினரின் பூர்வீக சொத்தான சுமார் 40லட்சம் மதிப்புள்ள 1ஏக்கர்இடத்தை தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி.