இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

தொண்டி, ஆக. 14:  தொண்டி கடல் பகுதியில் இறந்து உடல் அழுகிய நிலையில் சுமார் 500 எடை கொண்ட டால்பின் கடலில் மிதந்து வந்துள்ளது. இதுகுறிதது தகவல் அறிந்த வனத்துறை அலுவலர் சதீஷ் உத்தரவின் பெயரில் வனவர் சுதாகர் உள்ளிட்டோர் சென்று டால்பினை கைப்பற்றி மருத்துவ பரிசோதனை செய்து புதைத்தனர்.

இதுகுறிதது வனத்துறையினர் கூறுகையில், இது ஓங்கி என்னும் டால்பின் வகையை சேர்ந்தது. 8 அடி நீளம் 5 அடி சுற்றளவு 500 கிலோ எடை உள்ளது. நடுக்கடலில் கப்பலில் மோதி வாய் பகுதியில் காயம் பட்டதால் 4 நான்கு நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். உடன் டால்பினை மருத்துவ பரிசோதனை செய்து புதைத்தனர்.

Related Stories: