ஆண்டிபட்டி, ஆக.14: ஆண்டிபட்டி பகுதியில் வீசும் ஆடி மாத காற்றினால் வாழை மரங்கள் சாய்ந்தும், இலைகள் கிழிந்தும் வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். ஆண்டிபட்டியை சுற்றி புள்ளிமான் கோம்பை, தர்மத்துபட்டி, டி.அணைக்கரைபட்டி, சீரெங்கபுரம், குன்னூர் உள்ளிட்ட கிராமங்கள் வைகை ஆற்று கரையோரங்களில் அமைந்துள்ளன. இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மேலாக உள்ளதால் பூ வகைகள் மற்றும் காய்கறிகள் குறிப்பாக வாழையை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.