வருசநாடு, ஆக.14: கடமலை மயிலை ஒன்றியத்தில் போலீசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கடமலை மயிலை ஒன்றியத்துக்குட்பட்ட வருசநாடு அருகே உள்ள பவளநகர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற இளைஞர் சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் வருசநாடு காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகெண்டதாக உறவினர்கள் தேனி அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி டிஎஸ்பி சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரேத பரிசோதனைக்கு பின்பு உண்மை நிலை அறிந்து செயல்படுவதாக தகவல் தெரிவித்தார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.