தேனி, ஆக. 14: தேனியில் தொடர் மழை காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் சின்னமனூர், ஆண்டிபட்டி, பூமலைக்குண்டு, வயல்பட்டி, கொடுவிலார்பட்டி, சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. இதில் மல்லிகை, முல்லை, ஜாதி, சம்மங்கி, கோழிக்கொண்டை, அரளி, சாமந்தி உள்ளிட்ட பூக்கள் வகைகள் விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதிகளில் விளையும் பூக்கள் தேனி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் வரை தேனி பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ஒன்றுக்கு ரூ.200க்கும், முல்லை, ஜாதி பூக்கள் கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனையானது.