கரூர், ஆக. 14: திருச்சி புறவழிச்சாலையில் லாரி பார்க்கிங் காரணமாக நெரிசல் ஏற்படுகிறது.கரூர்- திருச்சி புறவழிச்சாலையில் வீரராக்கியம், வெங்கக்கல்பட்டி ஆகிய இடங்களில் அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. வெங்கக்கல்பட்டி அணுகுசாலை வழியாக கலெக்டர் அலுவலகம், தாந்தோணிமலை வந்து கரூருக்கு வரவேண்டிய வாகனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று கரூரில் இருந்து செல்ல வேண்டிய வாகனங்களும் சென்று கொண்டிருக்கிறது. மேம்பாலத்தின் கீழ்பகுதியில் அணுகுசாலை அமைக்கப்பட்டிருக்கிறது.