கரூர் சுக்காலியூரில் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் கழிவறை

கரூர், ஆக. 14: கரூர் அருகே சுக்காலியூரில் பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ள சுகாதார வளாக கழிவறையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் அருகே உள்ள சுக்காலியூரில் சுகாதார வளாக கழிவறை உள்ளது. இதை அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகத்தை சரியான முறையில் பராமரிப்பு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் முட்செடி கொடிகள் வளர்ந்து காடு போல் மண்டிக் கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் இந்த பொது கழிவறையை பயன்படுத்துவதில்லை. அப்பகுதியில் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவதால் பல்வேறு சுகாதார கேடுகள் ஏற்படுகிறது.அதேபோல் பொதுமக்கள் தொற்று நோய்களால் பாதிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: