மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

கரூர், ஆக. 14: கரூர் அருகே மகளிர் சுய உதவிக்குழுவில் பணம் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்த பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார்விசாரிக்கின்றனர்.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரின் மனைவி ஹேமாபிரியா(25). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஹேமாபிரியா அருகில் உள்ள ஒரு மகளிர் சுய உதவிக்குழுவில் பணம் கடனாக வாங்கியுள்ளதாக தெரிகிறது. கடந்த சில வாரங்களாக தவணை கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த நிலையில் இருந்த ஹேமாபிரியா தனது தாயிடம் பணம் கேட்டும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் கடந்த 11ம் தேதி அன்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை இறந்தார்.இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: