கரூர், ஆக. 14: கரூர் அருகே மகளிர் சுய உதவிக்குழுவில் பணம் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்த பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார்விசாரிக்கின்றனர்.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரின் மனைவி ஹேமாபிரியா(25). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஹேமாபிரியா அருகில் உள்ள ஒரு மகளிர் சுய உதவிக்குழுவில் பணம் கடனாக வாங்கியுள்ளதாக தெரிகிறது. கடந்த சில வாரங்களாக தவணை கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.