ஊட்டி, ஆக. 14: ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படுமோ என்று பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் 3ம் தேதி துவங்கிய மழை சுமார் 5 நாட்கள் கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது. பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை.