சத்தியமங்கலம், ஆக.14: சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். சத்தியமங்கலம் வனச்சரகத்திற்குட்பட்ட ராமபைலூர் வனப்பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாடுவதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னாட் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் நேற்று ரோந்து சென்றனர்.அப்போது, புளியமரக்கொடிக்கால் என்ற இடத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான குட்டையில் நாட்டு வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை பிடித்தனர்.