கறம்பக்குடி அருகே மணல் திருடிய டிப்பர் லாரி பறிமுதல் டிரைவர் கைது

கறம்பக்குடி, ஆக.14:புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கறம்பக்குடி போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் கீதா ரோந்து பணியில் ஈடுபட்டார். அப் போது கறம்பக்குடி சடையன் தெரு சாலை அருகே வேகமாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்தபோது, அதில் அனுமதி இன்றி அக்னி ஆற்றில் இருந்து மணல் திருடி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள மருதங்குடியைசேர்ந்த அண்ணாதுரை(35) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: