பண்ருட்டி, ஆக. 14: பண்ருட்டி அருகே திருத்துறையூர், சின்னப்பேட்டை ஆகிய கிராமங்களுக்கு சுடுகாடு, தகனமேடை, தண்ணீர் வசதி ஆகியவை இல்லாமல் கடந்த 25 ஆண்டிற்கும் மேலாக பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இவற்றை சீரமைப்பதற்கு பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் எவ்வித பலனும் ஏற்படவில்லை. இப்பிரச்னைகளை நிறைவேற்றகோரி சிபிஎம், திமுக, தவாக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சவப்பாடை போராட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தப் போவதாக அறிவித்தது. இதையடுத்து நேற்று காலை சவப்பாடை எடுத்து வந்து போராட்டம் செய்ய ஒன்றிய செயலாளர் லோகநாதன் தலைமையில் திமுக ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், வார்டு செயலாளர் சத்தியகுமரன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் காந்தி, சிபிஎம் விதொச மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட குழு கிருஷ்ணன், ஒன்றிய குழு ரங்கநாதன் ஆகியோர் வந்திருந்தனர்.