பண்ருட்டி, ஆக. 14: பண்ருட்டி அருகே வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல்(45), முந்திரி விவசாயி. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே இடம் பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், முருகவேல் தனது வீட்டிற்கான வேலி அமைத்திருந்தார். இதனை அறிந்த முருகன், வேலியை அகற்றியபோது தகராறு ஏற்பட்டது. இதில் முருகவேல் மனைவி ராஜேஸ்வரி தாக்கப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து ராஜேஸ்வரி, முத்தாண்டிகுப்பம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் முருகன், இவரது மனைவி ராஜலட்சுமி, மகன் பழனி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதேபோல் முருகன் தரப்பில் கொடுத்த புகாரின் பேரில் முருகவேல், ராஜேஸ்வரி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.