கடலூர், ஆக. 14: கடலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சி.என். பாளையம் ஊராட்சி பகுதி மக்கள், 100 நாள் வேலை திட்டத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், பணிகள் வழங்க வலியுறுத்தியும் கடலூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் 100 நாள் வேலைத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. இதற்கிடையே திட்டத்தின்படி உரிய முறையில் பணிகள் வழங்கப்படுவதில்லை, வேலை பார்க்கும் கிராம மக்களுக்கு ஊதியம் முறையாக கொடுப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் மாவட்டம் முழுவதும் எழுந்துள்ளது. இந்த நிலையில், கடலூர் ஒன்றியம் சி.என். பாளையம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட கிராம மக்கள் தங்களது கிராமத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் முறையாக வழங்கப்படவில்லை. எனவே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முழுமையான பணிகளை வழங்கி அடிப்படை திட்ட பணிகளை கிராமத்தில் மேம்படுத்தவேண்டும்.