நாகையில் உலக தாய்ப்பால் வாரவிழா

நாகை, ஆக.14: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நாகை தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது.திட்ட அலுவலர் ராஜம் வரவேற்றார். டிஆர்ஓ இந்துமதி தொடங்கி வைத்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மகாராணி, வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள் கல்யாணி, சித்ரா, சாந்தி, சாயிரபானு, மருத்துவ அலுவலர்கள், தாய்சேய்நல அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தாய்பால் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Related Stories: