குருணை மருந்து தின்ற 6 ஆடுகள் பலி

திருச்சுழி. ஆக. 11: திருச்சுழி அருகே, வேடநத்தம் கிராமத்தில் பல குடும்பத்தினர் ஆடு வளர்த்து வருகின்றனர். நேற்று மாலை கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள வேலம்மாள் என்பவரின் வைக்கோல் போருக்கு  10க்கும் மேற்பட்ட ஆடுகள் மேயச் சென்றுள்ளன. அங்கு ஆடுகள் மேய்வதை தடுக்க, வைக்கோல் போரைச் சுற்றி குருணை மருந்தை வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வை க்கோல் போரில் மேயச் சென்ற வடிவேலன் என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகள், தினகர பாண்டியனுக்கு சொந்தமான 3 ஆடுகள், நாகராஜனுக்கு சொந்தமான ஒரு ஆடு என 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாயின. 3 ஆடுகள் சீரியஸாக உள்ளன. புகாரின்பேரில், ரெட்டியபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: