மாவட்ட அளவிலான கேரம் போட்டி திருவில்லி. மகாத்மா வித்யாலயா பள்ளி வெற்றி

திருவில்லிபுத்தூர், ஆக.11: சிவகாசி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், சிவகாசியில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், திருவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 8 வயதுக்குக் கீழ் உள்ள மாணவர்களுக்கு நடந்த போட்டியில், இப்பள்ளியின் யுகேஜி மாணவி அபிநயா முதலிடத்தையும், பிரியதர்ஷினி 2ம் இடத்தையும் பிடித்தனர். 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான பிரிவில் நடந்த போட்டியில், இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பிரஜித், சாய்பிரமோதித்தா, விக்னேஷ், பிரியதர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களை, மகாத்மா வித்யாலயா பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில்,  பள்ளி தாளாளர் முருகேசன், முதல்வர் ராணி முருகேசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: