மழையால் பாதித்த மக்களுக்கு நகர திமுக,வினர் நிவராணம்

ஊட்டி, ஆக.11:  ஊட்டியில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நகர திமுக., சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.  நீலகிரி  மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கன மழை பெய்து வந்தது. இதில், ஊட்டி  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.  நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் கஸ்தூரிபாய் காலனி மற்றும் குருசடி  காலனி பகுதியில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் சென்றதால், பொதுமக்கள்  பாதிக்கப்பட்டனர். பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் நிவாரண பொருட்கள்  வழங்கப்பட்டது. எனினும், போதுமானதாக இல்லாத நிலையில், தற்போது பலரும்  உதவி செய்து வருகின்றனர். காந்தல் ஓம்பிரகாஷ் துவக்கப் பள்ளியில் தங்க  வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊட்டி நகர திமுக., சார்பில் உணவு மற்றும்  நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. நகர செயலாளர் ஜார்ஜ் தலைமையில் அங்குள்ள  மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் ேபாது, மாவட்ட  பொருளாளர் நாசர்அலி, கார்டன் கிருஷ்ணன், மஞ்சுகுமார், மகளிர் தொண்டர் அணி  துணை அமைப்பாளர் கீதா உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

Related Stories: