சாத்தான்குளத்தில் ரகளை இருவர் கைது

சாத்தான்குளம், ஆக. 11:  

சாத்தான்குளம் பஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.    சாத்தான்குளம்   எஸ்.ஐ பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். இதில் பழைய பஸ் நிலையம் காமராஜர் சிலை முன்பாக பொதுமக்களுக்கு இடையூறு  தரும் வகையில் இருவர் ரகளையில் ஈடுபட்டிருந்தனர்.     இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை  நடத்தியதில் அவர்கள் சாத்தான்குளம் செட்டியார் தெருவைச் சேர்ந்த  கந்தசாமி மகன் முருகன், தூத்துக்குடி தாளமுத்துநகரைச்  சேர்ந்த டிரைவர் பேச்சிமுத்துவின் மகன் பெருமாள் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: