காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்து ரத்து கண்டித்து தவ்ஹீத் ஜமாத்தினர் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர், ஆக.11 காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்ததை கண்டித்து கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜலாலுதீன் வகித்தார். மாவட்ட பொருளாளர் செய்யது மசூது, மாவட்ட துணைத்தலைவர் அப்துல்காதர், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல்ஸலாம், புகாரி, ஹாஜாமைதீன் முன்னிலை வகித்தனர்.மாநில செயலாளர் நெல்லை பைசல் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கடையநல்லூர் அனைத்து கிளை தலைவர்கள் டவுண் சாகுல்கமீது, பேட்டை அப்துல்காதர், பஜார் அல்தானி, மதீனாநகர் முகம்மது, ரஹ்மானியாபுரம் பாரூக், மக்காநகர் அன்சாரி, தவ்ஹீது நகர் குல்லிஅலி உட்பட நுற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: